
ராணிப்பேட்டை: பைக்குகள் மோதி விபத்து; வாலிபர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் வேடல் கிராமம் பெரியார் நகரில் அரக்கோணம் - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று மாலை இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.