போளூர் - Polur

போளூர் மாணவிகள் மாநில அளவில் விளையாட தகுதி

போளூர் மாணவிகள் மாநில அளவில் விளையாட தகுதி

திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் போளூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு சதுரங்கப் போட்டியில் பி. எஸ். ஸ்ரீ நிஷா ஒன்பதாம் வகுப்பு மாணவி முதலிடம். இறகுப் பந்து போட்டியில் எஸ். பூர்விகா ஒன்பதாம் வகுப்பு முதல் இடமும், சிலம்பம் போட்டியில் வி. ஷாலினி பன்னிரண்டாம் வகுப்பு முதல் இடத்திலும் வெற்றி பெற்ற இந்த மூன்று மாணவிகளும் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மாணவிகளுக்கு இன்று(செப்.20) தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை