![கார் மோதி பைக்கில் சென்ற தந்தை, மகன் பலி 2 பேர் உயிரிழப்பு. கார் மோதி பைக்கில் சென்ற தந்தை, மகன் பலி 2 பேர் உயிரிழப்பு.](https://media.getlokalapp.com/cache/78/7c/787c80836341790c068f11608cda30b0.webp)
கார் மோதி பைக்கில் சென்ற தந்தை, மகன் பலி 2 பேர் உயிரிழப்பு.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்தவர் குப்பன்(65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் பாலசுப்ரமணி(45). பாமகவில் மாநில இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று தனது சொந்த ஊரான கொரால்பாக்கம் கிராமத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். போளூர் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்த ஆந்திராவை சேர்ந்தவர்களது காரை முந்தி செல்ல பாலசுப்பிரமணி முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக பைக் மீது கார் மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அதே நேரத்தில் அவர்களுக்கு பின்னால் வந்த திருவண்ணாமலை தாலுகா, ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த சேட்டு(49), நாயுடுமங்கலத்தை சேர்ந்த மாதவன்(45) ஆகியோரது பைக்கும் கார் மீது ேமாதியது. இந்த விபத்தில் 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது மகன் பாலசுப்பிரமணி மற்றும் மற்றொரு பைக்கில் வந்த சேட்டு, மாதவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் பாலசுப்பிரமணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியும் பரிதாபமாக இறந்தார்.