சேத்துப்பட்டு பழம்பேட்டையில் கிருஷ்ண ஜெயந்தி விழா.

67பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை யாதவ மகா சபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து பாலமுருகன் தெருவில் அமைக்கப்பட்ட உறியடி திருவிழாவில் அலங்கார ரூபத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் உறியடித் திருவிழா மற்றும் சறுக்கு மரம் நடைபெற்றது இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு உறியடித்தனர். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடம் அணிந்து கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

தொடர்புடைய செய்தி