கஸ்தம்பாடி பகுதியில் முள் புதரில் ஆண் சடலம்

78பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திருவண்ணாமலை நெடுஞ்சாலை கஸ்தம்பாடி பகுதியில் சாலை ஓரம் உள்ள அடர்ந்த செடிகள் முள்புதர்களில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் களம்பூர் அருகே உள்ள கஸ்தம்பாடி பகுதியில் உள்ள சாலை ஓரம் முள் புதரில் சடலமாக கிடந்தது ஆனந்தன் என தெரிய வந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனந்தனின் உடல்களில் ஆங்காங்கே பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் சடலமாக இருந்ததால் ஆனந்தனை யாராகிலும் அடித்து கொலை செய்துவிட்டு நடமாட்டம் இல்லாத நேரத்தில் இந்த பகுதியில் சாலை ஓரத்தில் வீசி சென்று விட்டார்களா? அல்லது கஸ்தம்பாடி கோவில் திருவிழாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை திருவிழாவை காண ஆனந்தன் செல்லும்போது சாலை விபத்தில் அடிபட்டு இறந்து கிடந்தாரா? என்ற கோணத்தில் அருகே உள்ள மதுபான கடைகளில் மது குடித்து விட்டு மது போதையில் ஏதாகிலும் பிரச்சனை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு அடித்துக் கொன்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ஹோட்டல் உரிமையாளரை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்து கிடந்த ஆனந்தனின் உடலை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி