
தி.மலை: சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், இஆப., அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆய்வு செய்த விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து மாணவியர் விடுதிகளுக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தினை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீப்பன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.