அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

62பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வசூர், குருவிமலை, காங்கேயனூர் புதுப்பாளையம், திருச்சூர் எடப்பிரை கிளை அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் L. ஜெயசுதா கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை, வட்டக் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி