"இந்துக்கள் நம்பிக்கை மீது தாக்குதல் நடந்துள்ளது.!" - பாஜக

72பார்த்தது
"இந்துக்கள் நம்பிக்கை மீது தாக்குதல் நடந்துள்ளது.!" - பாஜக
திருப்பதி லட்டுவில் நெய்க்குப் பதிலாக மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பாஜகவை சேர்ந்த வினோஜ் தனது கண்டனங்களை X பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நமது பாரம்பரியம், மரபுகள், பல கோடி இந்துக்களின் நம்பிக்கை ஆகியவற்றின் மீது நடத்தப்பட்டுள்ள மிகக் கொடூரமான தாக்குதல் இது. இந்த கொடும் குற்றத்திற்கு பின்னால் உள்ள ஒவ்வொரு நபரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி