இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி

82பார்த்தது
இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி
கர்நாடக மாநிலம் மங்களூருவின் புறநகர் கிண்ணிகோலி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். இவர் ஏராளமான பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலையில், அவருக்குச் சொந்தமான பசு ஒன்று இரண்டு தலை கொண்ட கன்றுக்குட்டியை ஈன்றது. அதன் தனித்துவமான நிலை காரணமாக, கன்று நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கன்றுக்கு பாட்டில் மூலம் உணவளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டியை ஏராளமான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி