போளூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது.

73பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் காவல் ஆய்வாளர் அல்லிராணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போளூர் தக்கோலத்தான் தெருவை சேர்ந்த சத்யராஜ் என்ற நபர் வீட்டின் எதிரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டினை விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனடியாக அவரை கைது செய்த போளூர் போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தினை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி