நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை
திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியை சுற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு டிரோன்கள் பறக்க உடனடியாக தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி இன்று உத்தரவு பிறப்பித்தார்.