பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை நாளைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. உதவித் தொகை பெறுவதற்காக நிலுவையில் உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியலும், இந்திய தேசிய நிதி கழகத்தால் செயல்படாத வங்கிக் கணக்குகள் குறித்த தரவுகளும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் புதுப்பிக்கப்பட்ட பட்டியலைத் தயாரித்து வழங்க தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.