தொடர்ச்சியாக தண்ணீர் பந்தல் திறக்கும் திமுக
நெல்லையில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. வெயில் தாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் மக்களின் தாகத்தை தணிக்க திமுக சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் திறந்து வைத்தார் இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.