நடுரோட்டில் பரிதாபமாக உயிரிழந்த தம்பதி (Video)

84பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் பைக்கில் பயணித்த தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முருகன் என்பவர் தனது மனைவி அமுதாவுடன் மோட்டூர் செல்வதற்காக ஹவுசிங் போர்ட் சாலை வழியாக வந்த போது விபத்தில் மாண்டனர். இந்த விபத்தில் சிக்கிய காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி