மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. பகீர் வீடியோ

50பார்த்தது
பீகாரில் பிறந்து 20 மணி நேரமே ஆன குழந்தை, பெகுசராய் மாவட்டத்தின் சதர் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்டது. மருத்துவமனையின் சிறப்பு குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து ஒரு பெண், குழந்தையுடன் வெளியேறும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. லோஹியாநகரைச் சேர்ந்த நந்தினி என்பவரின் குழந்தையை அடையாளம் தெரியாத பெண் தூக்கிச் சென்றுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி