ஏல்லை மாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது....
*கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு ஏல்லை மாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது* கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு ஏல்லை மாரியம்மன் கோவில் சிறப்பு வாய்ந்த பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் மூன்ற நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம் எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த தேதி 21. 4. 2024 கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடா்ந்து மூன்று நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் நிகழ்ச்சியின் முக்கிய நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட எல்லை மாரியம்மன் தேரில் அம்மன் வீற்றிருந்து கட்டபெட்டு நகரின் முக்கிய வழியாகச் கட்டப்பட்டு பஜார் செல்லும் சாலையில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது இந்த தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பக்தர்கள் தங்களது நடனமாடி மகிழ்ந்தனர்.