ஓசூர் - Hosur

காவேரிப்பட்டணம்: கல்லூரி மாணவி மாயம்

காவேரிப்பட்டணம்: கல்லூரி மாணவி மாயம்

கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் போத்தாபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். இவரை கடந்த 9ம் தேதி அன்று அவருடைய தந்தை அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற்றி விட்டு சென்றார். அவர் மாலையில் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி