பேரிகை அருகே மூதாட்டி உடலை சாலையில் வைத்து போராட்டம்.

83பார்த்தது
பேரிகை அருகே மூதாட்டி உடலை சாலையில் வைத்து போராட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்துள்ள சின்னகுத்தி பகுதியை சேர்ந்த முனியம்மா (80) என்ற மூதாட்டி சம்பவம் அன்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் உடலை வழக்கமாக எடுத்து செல்லும் பாதையில் வழி இல்லாமல் மாற்றுப்பாதையில் எடுத்து சென்றனர். ஆனால், ஒரு தரப்பினர் பட்டா நிலம் என்று கூறி இந்த வழியாக உடலை எடுத்து செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இத னால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மூதாட்டியின் உடலை கடத்தூர் -சின்ன குத்தி சாலையில் வைத்து உறவினர் களும் மறியலில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்த பேரிகை போலீசார் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து மூதாட்டியின் உடல் அந்த பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி