![ஓசூர்: பகவத் கீதை பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி. ஓசூர்: பகவத் கீதை பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி.](https://media.getlokalapp.com/cache/db/4a/db4a820177eb65f7063d5389fb7160ca.webp)
ஓசூர்: பகவத் கீதை பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்மயா மிஷன் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்கள் இடையே பகவத்கீதை ஒப்புவித்தல் போட்டியை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பகவத் கீதை 5-ஆம் அத்தியாயம் ஒப்புவித்தல் போட்டியில் பங்குபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அச்செட்டிபள்ளியில் உள்ள சின்மயா மிஷன் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியை சின்மயா மிஷன் சுவாமி சாஸ்வதாநந்தா மற்றும் உறுப்பினர்கள் விஜயா, வைதேகி, சுகன்யா. இந்துமதி குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தனர். ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பள்ளியின் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து கீதை ஒப்புவித்தல் போட்டியில் அவர்களை கலந்து கொள்ள உற்சாகப்படுத்துவதாக தெரிவித்தனர்.