ஓசூர் - Hosur

வடமாநிலத் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்தவருக்கு காப்பு.

வடமாநிலத் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்தவருக்கு காப்பு.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ஜூகல்மியா (22) இவர் ஒசூர் சாந்தி நகரில் தங்கி தனியார் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அன்று ஜூகல்மியா தனது நண்பர்களுடன் ஒசூரில் ரிங்ரோடு பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர். ஜூகல்மியாவை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ. 2 ஆயிரத்தை பறித்து சென்றபோது தனது நண்பர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் சூளகிரி அருகே உள்ள சானமாவு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (19) எனதெரிய வந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணைக்கு நீர் வரத்து தொடங்கியது.
May 15, 2024, 04:05 IST/ஊத்தங்கரை
ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணைக்கு நீர் வரத்து தொடங்கியது.

May 15, 2024, 04:05 IST
தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மூன்று மாதங்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணைக்கு நீர் வரத்து தொடங்கியது. அணைக்கு நீர் வரத்து 1126 கன அடியாக உயர்வு கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் பழுதை சரி செய்யப்பட்டு வருவதால் கெலவரப்பள்ளி அணைக்கு வரக்கூடிய நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்துள்ளது விடப்பட்டுள்ளது. மேலும் தென்பெண்ணை ஆற்று படுக்கைகளில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணைக்கு நீர் வரத்து மூன்று மாதங்களுக்கு பிறகு தொடங்கி உள்ளது. கடும் வறட்சி காரணமாக கே. ஆர். பி. அணையின் நீர் மட்டம் 52 அடியில் இருந்து 38 அடிக்கு குறைந்த நிலையில் தற்போது அணைக்கு நீர் வரத்து 1126 கன அடியாக உயர்ந்துள்ளதால் அணையின் நீர் மட்டம் 38 அடியில் இருந்து 40. 20 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையின் முழு கொள்ளளவு 52 அடியில் அணைக்கு நீர் வரத்து 1126 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 12 கன அடியும், அணையின் நீர் மட்டம் 40. 20 கன அடியாக உள்ளது.