வடமாநிலத் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்தவருக்கு காப்பு.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ஜூகல்மியா (22) இவர் ஒசூர் சாந்தி நகரில் தங்கி தனியார் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அன்று ஜூகல்மியா தனது நண்பர்களுடன் ஒசூரில் ரிங்ரோடு பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர். ஜூகல்மியாவை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ. 2 ஆயிரத்தை பறித்து சென்றபோது தனது நண்பர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் சூளகிரி அருகே உள்ள சானமாவு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (19) எனதெரிய வந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.