ஒசூரில் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

84பார்த்தது
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு பிறந்த நாளை பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அதே போல ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஓசூர் எம் ஜி சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் மற்றும் ரொட்டி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் தியாகராஜன், துணைத் தலைவர் கீர்த்தி கணேஷ். மாவட்ட மகளிர் அணி தலைவு சேர்ந்த சரோஜாம்மா, துணைத் தலைவி லலிதா, திருவேங்கடம், மைஜா அக்பர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி