ஸ்ரீ பிரத்தியங்கிராதேவி திருக்கோயிலில் பௌர்ணமி வழிபாடு

75பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரணபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி திருநாள் வழிபாடு நடைபெற்றது.

இதனையொட்டி திருக்கோயிலில் உள்ள மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் ஆராதனைகளும் மங்கள ஆரத்தியும் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு யாகசாலையில் பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ராகு கேது பரிகார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி