சாமிக்கு சூடப்பட்ட ரூ. 90 லட்சம் மதிப்பிலான கீரிடம்

65பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குடிசெட்லு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பிரசன்ன திம்மராயசுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் லக்கண்ணா – சாந்தம்மா தம்பதியினர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ. தி. மு. க. , செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி அவர்களின் கோரிக்கையை ஏற்று 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கிரீடத்தை வாங்கினர்.

அக்கிரீடத்தை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் மூலம் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினர்.


நிகழ்ச்சியில் கோவில் கமிட்டி நிர்வாகிகள் லக்கப்பா சந்திரம்மா குடும்பத்தினர், மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார், ஒன்றே குல தலைவர் சசி வெங்கடசாமி, ஓசூர் ஒன்றிய குழு உறுப்பினர் சந்தியா கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ,.

தொடர்புடைய செய்தி