பாலக்கோடு - Palacode

பாலக்கோடு: குட்கா பதுக்கிய 2 கடைகளுக்கு சீல்

பாலக்கோடு: குட்கா பதுக்கிய 2 கடைகளுக்கு சீல்

காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா மேற்பார்வையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால் மற்றும் அலுவலர்கள், காவலர்கள், காரிமங்கலம் மற்றும் அனுமந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், டீக்கடை, பெட்டிக் கடைகளில் இன்று (அக்.,9) காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரிமங்கலம் பகுதியில் உள்ள பீடா கடை மற்றும் அனுமந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மளிகை கடை ஆகிய 2 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து காவலர்கள் குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன் 2 கடைகளுக்கும் தலா 25, 000 அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.

வீடியோஸ்


தர்மபுரி