பாலக்கோடு - Palacode

மாரண்டஅள்ளி: பால் நிறுவனத்தில் திருட முயன்ற இருவர் கைது

மாரண்டஅள்ளி: பால் நிறுவனத்தில் திருட முயன்ற இருவர் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளி அடுத்த செங்கன் பசுவந்தலாவ் பகுதியில் தனியார் பால்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று(அக்.4) இரவு இந்த நிறுவனத்தின் பின்புறம் உள்ள காம்பவுண்ட் சுவர் மீது 2 பேர் ஏறி குதித்து அங்குள்ள குடோனில் இருந்து காப்பர் வயர்களை திருடிச் செல்ல முயன்றனர். சத்தம் கேட்டு பாதுகாவலர் வரவே தப்பி ஓடி தலை மறைவாகினர். இது குறித்து நிறுவன மேலாளர் இன்று (அக்டோபர் 05) அளித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரனை நடத்தினர். அதில் திருட முயன்றது மாரண்டஅள்ளியை அடுத்த கொலசனஅள்ளியை சேர்ந்த ஜெயசூர்யா, மற்றும் அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரிய வந்தது. 2 பேரையும் காவலர்கள் கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


தர்மபுரி