காரிமங்கலம்: வாரச்சந்தையில் 15 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

75பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகலில் தேங்காய் விற்பனைக்கு என்று பிரத்தியேகமாக மாவட்ட அளவிலான வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் அக்டோபர் 07 நேற்று நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் 1 லட்சத்து 50 ஆயிரம் மேற்பட்ட தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வர உள்ளதால் தேங்காய் விற்பனை சூடு பிடித்தது 08 ரூபாய் முதல்16 ரூபாய் வரையில் தேவைகள் விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் 15 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி