வார சந்தையில் 11 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

66பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தில் வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற தேங்காய் விற்பனைக்காக நடைபெறும் பிரத்தியேக வாரச்சந்தை நடைபெறுகிறது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

நேற்று செப்டம்பர் 23 நடந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் 1 லட்சத்திற்கு குறைவாக தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தது. தேங்காய் அளவை பொறுத்து 7ரூபாய் முதல் 14ரூபாய் வரை விற்ப னையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் 11 லட்சம் அளவிற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து குறைவாக இருந்தது. புரட்டாசி மாதம் நடப்பதால் தேங்காய் தேவை அதிகரித்த நிலையில் விலையும் அதிகரித்து காணப்பட்டது. வரும் நாட்களில் தேங்காய் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி