

பாலக்கோடு: மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை உறுதி திட்ட நிதி 4000 கோடி தமிழ்நாட்டுக்கு தராத மத்திய அரசை கண்டித்து திமுக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி கே முரளி தலைமையில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் கைகளில் நான்காயிரம் கோடி நிதியை உடனடியாக வழங்கிட என பதாகைகளை கைகளில் ஏந்தி மத்திய அரசை மோடி அரசே தமிழக மக்களுக்கு மோசடி செய்யாதே எனவும் நான்காயிரம் கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷமிட்டனர் உடன் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.