பாலக்கோடு - Palacode

அரசு விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

அரசு விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

நல்லம்பள்ளி வட்டம், ஒட்டப்பட்டியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவ விடுதியில் 420 ஆதிதிராவிடர் நல மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் 28 அறைகளுடன், சுமார் 200 மாணவர்கள் உணவு அருந்தும் வகையிலான உணவு கூடம், சமையல் அறை, பொருட்கள் வைப்பு அறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் இவ்விடுதி கட்டப்பட்டுள்ளது. மாணவிகள் விடுதியில் 100 மாணவிகள் உள்ளனர். மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 20, 000 மதிப்பிலான 2 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் செயல்பாடு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுக்கு பயில மாணவ விடுதி நூலகத்திற்கு ரூ. 10, 000 மதிப்பிலான TNPSC போட்டி தேர்வு புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயின்று போட்டி தேர்வுகள் எழுதி வெற்றிபெற்று மத்திய, மாநில அரசு பணிகள், வங்கிகள், பொதுநிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியில் சேர்ந்து நாட்டிற்கும் வீட்டிற்கும் இந்த மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடவேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி. மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வீடியோஸ்