பாலக்கோட்டில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செப்டம்பர் 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட நிர் வாகி கண்ணன், துணைத்தலைவர் ஜெய்சங்கர், இணைச் செயலாளர்கள் சரவணன், குமார், நிர்வாகிகள் மாது, சேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி