முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

79பார்த்தது
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி நேற்று செப்டம்பர் 27 மாலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, தருமபுரி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக கடந்த 10. 09. 2024 அன்று முதல் தொடர்ந்து நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்திலிருந்து மொத்தம் 19994 வீரர் வீராங்கனைகள் பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் ஆண்கள் 11485, பெண்கள் 3842 என மொத்தம் 15327 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் வருகின்ற 04. 10. 2024 அன்று முதல் நடைபெறவுள்ள மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
தருமபுரி மாவட்டத்திலிருந்து 718 வீரர் வீராங்கனைகள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இஆப. தெரிவித்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி