ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

77பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று செப்டம்பர் 27 மாலை தர்மபுரி நோக்கி வேகமாக சென்ற மினி லாரி, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. லாரியை ஓட்டி வந்த டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவல் அறிந்த பெரியாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது லாரியில் முன்புறம் கர்நாடக மாநில பதிவு எண்ணும், பின்புறம் தமிழ்நாடு மாநில பதிவு எண்ணும் இருந்தது.

லாரியில் பச்சை மற்றும் புழுங்கல் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 6 டன் ரேஷன் அரசி மூட்டைகள் மற்றும் கடத்திச்சென்ற மினி லாரியை காவலர்கள் பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு காவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி