ஆண் மற்றும் பெண் கொலை: 5 பேர் கைது

63பார்த்தது
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தடங்கம் சிப்காட் பகுதியில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரு சடலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், பிரேமலதா ஆகிய இருவரை கொலை செய்து வீசி சென்ற வழக்கில் தேனியை சேர்ந்த தேவராஜ் தருமபுரியை சேர்ந்த சபரி, பிரவீன் குமார், நந்தகுமார், கன்னியாகுமரியை சேர்ந்த அஸ்வின் ஐந்து பேரை இன்று செப்டம்பர் 29 தருமபுரி மாவட்ட அதியமான்கோட்டை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி