ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

பள்ளி மாணவன் கண்மாயில் சடலமாக மீட்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் முனிசெல்வம் என்ற மகன் உள்ளார். கருப்பசாமி இறந்த பிறகு தாய் சித்ரா கூலி வேலை செய்து மகனைவளர்த்து வந்தார். முனி செல்வம் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடரவில்லை என கூறப்படுகிறது. சிறுவன் கூலி வேலைக்கு செல்வதும், கிடைக்கிற வேலைகளை செய்வதுமாக இருந்துள்ளான். இந்நிலையில் வீட்டிலிருந்த சிறுவன் திடீரென மாயமான நிலையில், காணவில்லை என அக்கம் பக்கத்தில் சிறுவனின் தாய் சித்ரா தேடிய போது சிறுவன் கிடைக்கவில்லை. இந்நிலையில், லைலாப்பேரி கண்மாயில் நேற்று (செப்.,13) மாலை சிறுவனின் உடல் மிதப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர். பின்னர் தீயணைப்புத்துறை உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் குளிக்க சென்ற போது தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்