ஸ்ரீவி: இறந்த ராணுவ வீரரின் உடல் தொடர் மழையால் வருவது தாமதம்.

73பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர் சிக்கிம் மாநிலத்தில் வாகன விபத்தில் உயிர் இழந்தார். தொடர் மழையால் உடல் வருவதில் தாமதம் என அதிகாரிகள் தகவல்.
விருதுநகர் மாவட்டம்,
சிக்கிம் மாநிலம் பாகயோங்கில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளதாக்கில் கவிந்த விபத்தில் தமிழ்நாடு, ஹரியானா, மத்தியபிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இழந்தனர். மேலும் இதில் தமிழ்நாட்டை சேர்ந்த விருதுநகர் மாவட்டம், வத்றாப் தாலுகாவிற்குட்பட்ட கான்சாபுரம் கிராமத்தை தங்கபாண்டியன் ஆவார். உயிர் இழந்த தங்கபாண்டியன் தற்போது இராணுவத்தில் சுபதேராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் 6 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் சேர்ந்து தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். மேலும் வடமாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இறந்த இராணுவ வீரர் தங்கபாண்டியின் உடல் சொந்த ஊரான கான்சாபுரத்திற்கு கொண்டு வர கால தாமதமாகளாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி