ஸ்ரீவில்லிபுத்தூர்: கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது....

54பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இளைஞர் கைது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை தடுப்பு தொடர்பாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பைக்கில் வந்த மீனாட்சி கார்டன் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் தாமரைக்கனி என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தாமரைக்கனியை கைது செய்த மாம்சாபுரம் போலீசார், அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி