ஸ்ரீவி: ஆக்கிரிமிப்பு செய்த கோவில் நிலங்கள் மீட்பு...

66பார்த்தது
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 388 ஏக்கர் விளை நிலங்கள் மீட்பு.
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் விளை நிலங்களை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் பெயரில் பட்டா பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்காக மாவட்டம் தோறும் கோயில் நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் நியமனம் செய்தனர். மேலும் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூத்து உதயகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான 388 ஏக்கர் நிலம் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி கோசாகியார் பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் கோவில் பெயரில் நிலங்களை இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் மாற்ற அறங்காவலர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்களையும் கோவில் பெயரில் மாற்ற உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று மாலை கோவில் நிலங்களுக்கான தனி வட்டாட்சியர் மாரிமுத்து மற்றும் நில அளவையர் அழகு முத்துக்குமார் ஆகியோர் கோவில் நிலங்களை ஆய்வு செய்து, வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி