ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

அம்மாவின் கள்ளக்காதலனால் கர்ப்பிணியான சிறுமி: 20 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணிடம் ஜெயசீலன் என்ற நபர் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாது அப்பெண்ணின் மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதில் அச்சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அப்பெண் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஜெயசீலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஜெயசீலன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

வீடியோஸ்


விருதுநகர்