ஸ்ரீவில்லிபுத்தூர்: கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது..

54பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள மங்காபுரம் பகுதியிலுள்ள பொது கழிப்பறை அருகே தட்டாங்குளத்துப்பட்டியை சேர்ந்த சங்கிராஜ், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் ஆகிய இருவரும் சேர்ந்த கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவல் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராஜா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்யப்பட்டதில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தன. மேலும் அவர்களிடமிருந்து 65 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம், ரொக்க பணம்
ஆகியவற்றை கைப்பற்றிய நகர் காவல் நிலைய போலீஸார் மேற்படி இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர். மேலும் இதைப் போல் மம்சாபுரம் பகுதியிலுள்ள சிவந்திப்பட்டி பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்ததில் வைத்து அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது மம்சாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாரதிராஜா ரோந்து பணியும் மேற்படி நபரை சோதனை செய்த போது கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து, அதை கைப்பற்றிய காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி