சாத்தூர்: செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது...

52பார்த்தது
சாத்துார் அருகே இருசக்கர வாகனம் மூலம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது. 15 சரவன் தங்க நகை மீட்பு.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் உட்கோட்டத்திலுள்ள நகர் மற்றும் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரு வெவ்வேறு இடங்களில் நடந்து சென்ற இரு பெண்களிடம் கடந்த 28. 08. 2024 ஆம் தேதி அன்று. பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர்கள் கழுத்தில் கிடைந்த சுமார் 15 சவரன் தங்க நகைகளை பறித்து சென்று தப்பிவிட்டனர். மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட காவல் புகார் அளித்தனர். மேலும் புகாரின் பேரில் சம்பவம் நடந்த இடங்களில் காவல்துறையினர் CCTVகாட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் பதிவு செய்யப்பட்ட எண் கோவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தன. மேலும் தொடர் விசாரணையில் கோவை மாவட்டம், காளப்பட்டி பெரியார் நகரை சேர்ந்த சூரியபிரசாந்த், மற்றும் திருச்சி மாவட்டம், புதுார் பகுதி பட்டாபிராமன் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பது தெரிய வந்தன. இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ளபட்டதில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். பின்னர் 15 சவரன் நகைகளை மீட்டு சாத்துார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி