சிவகாசி: சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயார் செய்தவர் கைது...

60பார்த்தது
சிவகாசி அருகே வீட்டில் வைத்து பட்டாசு தயார் செய்தவர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜமீன் சல்வார்பட்டி, வடக்கு தெரு, கிழக்கு காலனியை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் மாதவன் என்பவர் வீட்டில் வைத்து பட்டாசுகள் தயார் செய்வதாக வந்த ரகசிய தகவல் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்கு வந்தன. தகவல் அடிப்படையில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டன. மேலும் சோதனையில் புஸ்வானம் மற்றும் பேன்சி ரக வெடிகள் சட்டவிரோதமாக வீட்டில் தயார் செய்து பதுக்கி வைத்து இருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் மாதவன் மீது சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி