ஸ்ரீவி: பெருமாள் கோவில் கும்பாபிஷேகவிழாவில் குவிந்த பக்தர்கள்

57பார்த்தது
ஸ்ரீவி: பெருமாள் கோவில் கும்பாபிஷேகவிழாவில் குவிந்த பக்தர்கள்
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள வத்ராப் சேதுநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் குவிந்த பக்தர்கள்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள
சேதுநாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜை, விஸ்வரூபம், கோ பூஜை, பூர்ணா ஹூதி, கும்ப புறப்பாடு நடந்தது. காலை 7: 35 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக நிகழ்வுகளை சுந்தரராஜ பட்டர் தலைமையில், பட்டர்கள் செய்தனர். பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விசேஷத் திருவாராதனம், சாற்று முறை, ஆசீர்வாதம், தீர்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். எம். எல். ஏ. மான்ராஜ், பேரூராட்சி தலைவர் தவமணி, சேது நாராயண பெருமாள் கோயில் டிரஸ்ட் நிர்வாகிகள் சுந்தரராஜன், சீனிவாசன், ராம்குமார்,
உறுப்பினர்கள், அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர்கள் லட்சுமணன், கலாராணி, ஜோதிலட்சுமி ஆகியோர் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி