ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

போக்குவரத்து போலீசார் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பள்ளியில் இன்று போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ - மாணவிகளுக்காக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் சாலையில் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் சைகைகள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவைகள் செயல்முறை காட்சியாக செய்து காட்டப்பட்டது. மேலும் பள்ளி படிப்பு படித்து வரும் மாணவ- மாணவிகள் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் அது குற்றச்செயல் என்றும் அதற்காக அவர்களது பெற்றோர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பேசிய போக்குவரத்து போலீசார் தினமும் பள்ளிக்கு கிளம்பும்போது 5 நிமிடம் முன்பாகவே வீட்டில் இருந்து புறப்பட வேண்டும் என தங்களது பெற்றோர்களுக்கு மாணவ-மாணவிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளி நேரத்தை பின்பற்ற வாகனங்களில் அதிவேகமாக செல்லக்கூடாது என தங்களிடம் பெற்றோரிடம் வலியுறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Jul 04, 2024, 08:07 IST/இராசபாளையம்
இராசபாளையம்

ராஜபாளையம் அருகே யானைகள் அட்டகாசம் விவசாயிகள் வேதனை

Jul 04, 2024, 08:07 IST
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நகராட்சி குடிநீர் தேக்கம் பின்புறம் உள்ள வனசுத்தி காடு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் அமைந்துள்ளது. மாலையாபுரம் சேர்ந்த வனராஜ், லிங்கம், பொன்னுச்சாமி உள்ளிட்ட 20 விவசாயிகள் மா விவசாயம் செய்து வருகின்றனர். சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுயானை கூட்டம் விளைந்த நிலையில் உள்ள மாமரங்களை தொடர்ந்து ஒடித்து சேதப்படுத்தி வருகிறது. இந்த வருடம் மாம்பழ விளைச்சல் சரி பாதி குறைந்திருக்கும் நிலையில் மீதமுள்ள மாங்காய்கள் யானைகளால் அழிந்து வருவதாக அங்குள்ள 400 க்கும் மேற்பட்ட மாமரங்களில் சுமார் 150 மரங்களின் பெரியகிளைகள், விளைந்திருந்த மாங்காய்கள் என பல மரங்களை முற்றிலுமாக காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது. இதனால் தங்களுக்கு ரூ. 10 லட்சம்வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் சில நாட்களில் பகல் நேரத்திலேயே யானைகள் தோப்புக்குள் புகுந்துவிடுகிறது. வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். யானைகளால் சேதப்படுத்தப்பட்ட மா மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் வருவதை தடுக்க அகழி வெட்டி பாதுகாக்க வனத்துறை மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.