ஸ்ரீவில்லிபுத்தூர்: இராணுவ உயிர் இழப்பு. சோகத்தில்கிராம மக்கள்

65பார்த்தது
சிக்கிம் மாநிலத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகி 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்து உள்ளது
விருதுநகர் மாவட்டம்,
சிக்கிம் மாநிலம் பாக்யோங்கில் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் மத்தியப் பிரதேசம், மணிப்பூர், ஹரியானா மற்றும் தமிழகம் என 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுபேதர் கே. தங்கபாண்டியனும் உயிரிழந்தார். தங்கப்பாண்டியன்(41) ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். உயிரிழந்த ராணுவ வீரர் தங்கப்பாண்டியன் தற்பொழுது சுபேதராக பணியாற்றி வந்துள்ளார்.
உயிரிழந்த தங்கபாண்டியனுக்கு வளர்மதி என்ற மனைவியும் 6 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து 20 ஆண்டுகளாக தங்கபாண்டியன் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த தங்கபாண்டியன் உடலை உடனே அவரது சொந்த ஊரான கான்சாபுரம் கிராமத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணுவ வீரர் தங்கபாண்டியன் இறப்பு செய்தி அறிந்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி