சிவகாசி - Sivakasi

சிவகாசி: சுயநலத்திற்காக ஓபிஎஸ் சென்றார்.. முன்னாள் அமைச்சர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பாக நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், சுயநலத்திற்காக ஓபிஎஸ் கோபாலபுரம் சென்றதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் விமர்சனம். சிவகாசி அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டனும், கே. டி. ராஜேந்திரபாலாஜியும் பங்கேற்று, அதிமுக உறுப்பினர்களுக்கான உரிமைச் சீட்டுகளை வழங்கினர். மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அதிமுக என்ற இயக்கத்தையும், தமிழகத்தையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். எத்தனை கருணாநிதி, எத்தனை ஸ்டாலின் எத்தனை உதயநிதி வந்தாலும் அதிமுகவை ஒன்னும் செய்ய முடியாது, முதலமைச்சர் ஸ்டாலின் தனது மகனை துணை முதல்வராக்கியது தான் சாதனை என்றார், மேலும் மக்களுக்கு எதிரான ஆட்சி தான் தற்போது நடக்கிறது. பெட்டிக்கடை, டீக்கடை நடத்தி வந்த வரை சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மூன்று முறைகள் தமிழக முதல்வர் பதவி வகித்தவர் இன்று கோபாலபுரம் வீட்டுக்கு சென்றுள்ளார். சுயநலத்தின் மொத்த உருவமாக (ஒபிஎஸ்) இருந்தவர்களை எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கி வைத்துள்ளது சரியான முடிவு, யாரும் தடம் மாறாமல் நாம் அனைவரும் அதிமுக இயக்கம் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டுமென்றார்.

வீடியோஸ்


விருதுநகர்