சிவகாசி: சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது...

83பார்த்தது
சிவகாசி அருகே சட்ட லிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே மீனம்பட்டியில் ரத்னபுரி நகரில் உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்த அருவிச்செல்வம் என்பவர் ஸ்ரீ விக்னேஷ்வரா என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். தீபாவளி சீசன் என்பதால் தனது கடை அருகே காலிமனையில் தகர செட் அமைத்து அதில்
சட்டவிரோதமாக பல தரப்பட்ட பட்டாசுகள் மற்றும் கிப்ட் பாக்ஸ் இருப்பு வைத்து இருப்பதாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் சட்டவிரோதமாக காலிமனையில் சுமார் நாற்பதாயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் இருப்பு இருந்ததை கைப்பற்றிய சிவகாசி கிழக்கு போலீஸார் அருவிச்செல்வம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி