சிவகாசி: இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலி...

68பார்த்தது
சிவகாசி அருகே விபத்தில் முதியவர் பலி.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே விஸ்வநத்தம் இந்திராநகரை சேர்ந்தவர் குருசாமி (54). இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் M. புதுப்பட்டிக்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சாட்சியாபுரம் பாரதி நகரை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் குருசாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி