சிவகாசி: பட்டாசு ஆலை வெடி விபத்து. ஒரு பெண் காயம்...

52பார்த்தது
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இடி மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டு பணியில் இருந்த மூதாட்டி காயமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே செவலூரில் கணேசன் என்பவருக்கு சொந்தமான விநாயகா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்காண பட்டாசு உற்பத்தி பணிகளில் இன்று சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இடி, மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட தீ விபத்தில் குளோரைட் ரசாயண மூல பொருட்களை கையாளும் பணியில் ஈடுபட்ட காந்தியம்மாள் (73) என்ற பெண் தொழிலாளி பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள் பட்டாசு ஆலை வாகனம் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் 100 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து எம். புதுப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி