சிவகாசி: அதிமுக சார்பாக மனித சங்கிலி போராட்டம்...

50பார்த்தது
சிவகாசியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்.
விருதுநகர் மாவட்டம், தமிழகத்தில் தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை கண்டித்தும், மின்கட்டண உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் இன்று அதிமுகவினர் சிவகாசி பகுதிகளில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் சிவகாசி பேருந்து நிலைய முன்பாக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற கோரியும் மின் கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த பல்வேறு அணியை சேர்ந்த ஆண், பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :