சிவகாசி - Sivakasi

சிவகாசி: குடும்ப தகராறில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை...

சிவகாசி அருகே கணவன் தூக்குபோட்டு தற்கொலை. விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 37). இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் குடிபழக்கம் உள்ள கண்ணன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு வந்துள்ளது. அப்போது மாரீஸ்வரி தனது மகனுடன் அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இரவு தனது கணவனுக்கு போன் செய்து வீட்டிற்கு வரவா என்று கேட்டுள்ளார். அதற்கு கண்ணன் வர வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் அடுத்த நாள் மாரீஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த மனைவி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது அங்கு கண்ணன் தூக்கில் தொடங்கியபடி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாரீஸ்வரி அருகில் உள்ளவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து கண்ணனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். மாரீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


விருதுநகர்
Jul 25, 2024, 05:07 IST/சிவகாசி
சிவகாசி

சிவகாசி: குடும்ப தகராறில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை...

Jul 25, 2024, 05:07 IST
சிவகாசி அருகே கணவன் தூக்குபோட்டு தற்கொலை. விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 37). இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் குடிபழக்கம் உள்ள கண்ணன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு வந்துள்ளது. அப்போது மாரீஸ்வரி தனது மகனுடன் அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இரவு தனது கணவனுக்கு போன் செய்து வீட்டிற்கு வரவா என்று கேட்டுள்ளார். அதற்கு கண்ணன் வர வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் அடுத்த நாள் மாரீஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த மனைவி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது அங்கு கண்ணன் தூக்கில் தொடங்கியபடி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாரீஸ்வரி அருகில் உள்ளவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து கண்ணனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். மாரீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.