சிவகாசி: விடிய, விடிய சாரல் மழை. மக்கள் மகிழ்ச்சி...

63பார்த்தது
சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு நேரத்தில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து சிவகாசி, அனுப்பக்குளம், விளாம்பட்டி, சித்துராஜபுரம், பேராப்பட்டி, ரிசர்வ்லயன், காட்சியார்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சிவகாசி பகுதிகளில் பல நாட்களுக்குப் பின்னர் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ‌மேலும் விடிய, விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி