சிவகாசி: பட்டாசு ஆலை வெடி விபத்து. பலி எண்ணிக்கை ஒன்றாக உயர்வு

73பார்த்தது
பலி எண்ணிக்கை ஒன்று.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இடி மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டு பணியில் இருந்த மூதாட்டி சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே செவலூரில் கணேசன் என்பவருக்கு சொந்தமான விநாயக பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்காண பட்டாசு உற்பத்தி பணிகளில் நேற்று மதியம் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென இடி, மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட தீ விபத்தில் குளோரைட் ரசாயண மூல பொருட்களை கையாளும் பணியில் ஈடுபட்ட காந்தியம்மாள் (73) என்ற பெண் தொழிலாளி மீது இடி, மின்னல் தாக்கியதில் பலத்த தீக்காயமடைந்தார். அவரை மீட்ட சக தொழிலாளர்கள் பட்டாசு ஆலை வாகனம் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் 100 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருந்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த காந்தியம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் இன்று அதிககாலை உயிர் இழந்தார். மேலும் விபத்து குறித்து எம். புதுப்பட்டி காவல் நிலைய போலீசார் ஆலை உரிமையாளர் கணேசன், ஆலை போர்மேன் மாரியப்பன் மற்றும் மேலாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி